Tuesday, September 23, 2008




ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுரை நாடும்
துடர்வன வெளிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சுழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரன் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் எழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சிந்தற முடியும் இந்திரன் அறமும்
தென்திரை ஈழ மண்டலமும் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தோல் பெருங்காவல் பல்பழன் தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரன் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயங்கோடு பழிமிக முயன்கியில் முதுகிட்டு
ஒலித்தசைய சிங்கன் அளப்பரும் புகழோடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதி குலப்பேறு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிற்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமனைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுனித் தேசமும்
அயர்வில்வன் கீர்த்தி யாதினாக ரவையில்
சந்திரம் தொல்குலத் திந்திர ரதனை
விளையமார்க் காலத்துக் கிளையோடும் பிடித்துப்
பலதனத் டுநிரை குலதனக் குவியும்
கிட்டருன் செரிமிலை யோட்ட விஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்மை பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சுரணை முரனுரத் தாக்கித்
திக்கனைக் கீர்த்தி தக்கன லாடமும்
கோவிந்த சாந்தன் மாவிழின் தொடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பன் தாரமும்
நித்தில நெடுங்கடல் அத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகாலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்ம
பொருகடல் கும்பக் கரியோடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகனகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தறதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கண்மணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யுறேயில் தொன்மலை யுறும்
ஆழ்கடல் அகழ்சுள் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காபுறு நிறைபுனல் மாப்பப் பாலமும்
காவல் புரிசை மேவிளிம் பங்கமும்
விளைபந்த் துருடை வலைப்பன் தூரூம
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கொர்புகழ்த் தலைத் தக்கொலமும்
தீதமர் வல்வினை மாதமாளிங்கமும்
தெனக் கலர்போழில் மாநக்க வாரமும்
டுகதர் காவல் கடுமுரன் கடாரமும்
மாப்போருன தந்தார் கொண்ட
கோப பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு......












No comments: