Sunday, December 14, 2008

இந்திரா விழா

புகார் நகரினைப் பற்றி எழுதுங்கால் இந்திரா விழாவினைப் பற்றி குறிப்பிட்டு சொல்லாதிருந்தால் புகாரின் சிறப்பு தெரியாமலேயே போய் விடும் .

சோழர்கள் சூரிய மரபினர் என்றும் குறிப்பிடப் படுவர். அசுரர்களை எதிர்த்த இந்திரநிற்கு சோழர்கள் உதவினார் என்றும், அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பட்டினப்பாக்கமும் மருவ்வுர்பாக்கமும் இணைகின்ற இடத்தின் நடுவே இருந்த நாளங்காடி என்ற இடத்தினில் பலிபீடம் கொண்டு இருக்கும் பூதத்தினை இந்திரன் பூமிக்கு அனுப்பினான் என்று சொல்லப் படுகின்றது.

சோழர்கள் போரினால் வெற்றிப் பெற இந்த பூதம் துணை செய்கின்றது என்பதனால் பூததினைப் போற்றும் விதமும், இந்திரனை வணங்கும் விதமுமாக இந்த இந்திர விழா புகார் நகரினில் ஆண்டு தோறும் நடைப் பெற்றது. சித்திரை மாது சித்திரை விண்மீன் கூடிய பூரணை நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் இந்த விழா நடக்கும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இயம்புகின்றார்.

இந்த இந்திர விழாவினில், புகார் நகரத்தில் உள்ள அனைத்து வித மக்களும் எவ்வித பேதமும் இன்றி மகிழ்வுடன் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து இன்புறுவர். புகார் நகரினில் இருந்த யவனர்கள், அரபியர்கள், தமிழர்கள், கடல் கடந்து வந்த மக்கள் என அனைவரும் இந்த இருபத்தெட்டு நாட்களிலும் பங்கு பெறுவர் என்றும், கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிகழும். கடல் சூழ்ந்த இந்த புகார் நகரினில் இரவினில் தீப பந்தல்களின் நடுவே கலை நடனமும், பற்பல கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை நிலைநிறுத்தி போட்டி புரிவர்.

ஆகா, இந்திர விழா புகார் வாழ் மக்கள் அனைவரின் இன்பக்கரமான நாட்களாய் இருந்து வந்தமையை நாம் அறியலாம்.

மூன்றாம் ராஜேந்திர சோழன்

"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.

முதலாம் பாண்டிய போர்

தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.

ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.

போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்

வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.

தெலுங்கு சோழர்களுடன் நட்பு

மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.

போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை

குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.

பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும்

பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

Wednesday, December 10, 2008

மூன்றாம் ராஜ ராஜ சோழன்

சுந்தர பாண்டியனின் படை எழுச்சி

மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப் பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுக் கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராஜ ராஜன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதியா அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமையம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர் களம் புகுந்தான் பாண்டியன்.

மூன்றாம் ராஜ ராஜ சோழன் சோழர்கள் வம்சா வழியில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலில் நிழலில் இருந்த ராஜ ராஜ சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காக காத்திருந்த பாண்டியன், தக்க சமயத்தில் படை எடுத்து வந்து சோழ சாம்ராஜ்யத்தை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரை படை எடுத்து வந்து சோழனை பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராஜ ராஜ சோழன் தோற்று திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராஜ ராஜ சோழன்.

கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை

சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராஜ ராஜ சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்கு கட்ட வேண்டிய கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரினால் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது.

போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்கு பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராஜ ராஜ சோழனுக்கு அடி பணியாமல் ராஜ ராஜனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரை சென்று கொப்பெருஞ்சின்கனின் செல்வங்களை கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராஜ ராஜ சோழனை சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான்.

ராஜ ராஜ சோழனை மீட்ட பின்பு காவேரி கரை வரை சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரி கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகையைக்கு உட்பட்டு, அவர்களது ஆட்சியை சார்ந்தே இருந்தனர்.

வீர நரசிம்மன்

பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறைக் காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன். சோழர்களை பழையாறை நகரசும் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள போர் புரிந்த போது சேர்ந்துக் கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் மீது திரும்பக் கூடும் என்று சந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான் போசளன்.

மூன்றாம் ராஜேந்திர சோழன்

தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராஜ ராஜ சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது ஆட்சியின் நாற்பதாம் ஆண்டு தனது மகன் மூன்றாம் ராஜேந்திர சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சி ஆண்டிலேயே அவனை மன்னனாக அறிவித்தான்.

Thursday, November 27, 2008

மூன்றாம் குலோத்துங்க சோழன்

இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டுகளில் கடைசியாகச் சொல்லப்பட்டிருக்கும் ஆட்சி ஆண்டு பதினாறு. எனவே அவனுடைய ஆட்சி ஆண்டு கி.பி 11ல் தொடங்கியிருப்பின் அது, 1179வரையில் நீடித்திருக வேண்டும். அவன் ஆட்சிக்கு வந்ததே கி.பி 1166ல் என்று வைத்துக் கொண்டால், 1182வரை ஆண்டிருக்க வேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுக்களைப் பார்த்தால் கி.பி 1178ல் ஜூலை மாதம் 6 தேதிக்கும் 8 தேதிக்குமிடையே அவனுடைய ஆட்சி ஆரம்பமானதாகத் தெரிகிறது. எனவே அடுத்து பட்டத்திற்கு வந்து, ஆட்சி செய்யும் மன்னனாக மூன்றாம் குலோத்துங்கன் இராஜாதிராஜன் மரணத்திற்கு முன்னமே ஏற்றுக்கொள்ளப்பட்டான் என்று தெளிவாகத் தெரிகிறது.


முதலாம் பாண்டியப் போர்

ராஜாதி ராஜனின் துணையால் பாண்டிய நாட்டினை அடைந்த வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். குலசேகர பாண்டியனின் மைந்தன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்கனிடம் சரண் அடைந்து, தனக்கு பாண்டிய தேசத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டான். சோழர்களுக்கு தீமை செய்யும் வீர பாண்டியனை எதிர்க்க இன்னொரு காரணமும் கிடைக்க, போர் தினவேடுத்திருந்த குலோத்துங்கன் சோழப் படையை பாண்டிய தேசம் நோக்கி நகர்த்தினான். சோழர்கள் படையை இவனே தலைமை தாங்கி போர் நிலத்தில் வாளேந்தி நின்றான் அந்த வாலிப வீரன்.



எழகப் படை, மறவர் படை, ஈழப் படை ஆகியவை சோழனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் புறம் கண்டோடினர். போரினை வென்ற சோழன் தன் பால் அடைக்கலம் கண்ட விக்கிரம பாண்டியநிடத்தே பாண்டிய தேசத்தை ஒப்படைத்து கப்பம் கட்டுமாறு பணிவித்தான்.

இரண்டாம் பாண்டிய போர்

போரினால் துவண்ட வீரப் பாண்டியன், சேர தேசத்தை அடைந்து வீர கேரளன் உதவியை கோரினான். சேரப் படையுடன் தனது படையையும் இணைத்து, சோழனை எதிர்த்தான் வீரப் பாண்டியன். தனது பாண்டிய தேசத்தை அடையும் பொருட்டு அவன் மதுரை மாநகர் நோக்கி தனது படையை நகர்த்தினான் வீர பாண்டியன். இதனை அறிந்த சோழன் மதுரைக்கு கிழகே உள்ள நெட்டூரில் பாண்டிய படைகளை சந்தித்தான். அங்கே ஏறுப் பெரும்படைகளுக்கும் நடுவே மிகப் பயங்கரப் போர் நிகழ்ந்ததாக அறியப் படுகின்றது. இந்தப் போரிலும் வீர பாண்டியன் தோல்வியையே சந்தித்தான்.

தோல்விக்கு பின் பாண்டியன் சேர தேசம் சென்று வீர கேரளனிடம் சரண் அடைந்தான். இரண்டாம் பாண்டிய போரில் குலோத்துங்கனின் ஆற்றலை அறிந்த வீர கேரளன், பாண்டியனிற்கு அடைக்கலம் கொடுத்தால் சோழன் தன்னையும் எதிர்த்து வருவான் என்பதை அறிந்து அவன் மேல் கொண்ட மதிப்பால் பாண்டியனை சோழனிடமே அடைக்கலம் அனுப்பி வைத்தான். அடைக்கலம் புகுந்த பாண்டியனை அனுசரனயுடன் அணைத்தான் சோழன். அவனுக்கு பாண்டிய தேசத்தின் ஒரு பகுதியை பிரித்து அரசாள கொடுத்தான்.

ஈழப் போர்

சோழர்கள் சிறப்புற ஆட்சி புரிவதனை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே சோழர்களுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் இருந்தனர். அது மட்டும் இல்லாமல் பாண்டிய மன்னர்களை தூண்டி விட்டு சோழ தேசத்தில் குழப்பம் ஏற்ப்படுத்தி வந்தனர். இதனால் கடும் சினம் கொண்ட குலோத்துங்கன் தனது சோழப் படைதனை இலங்கை தேசம் நோக்கி அனுப்பி வைத்தான். இதனை அடுத்து சோழ தேசத்திற்கும் ஈழ தேசத்திற்கும் பெரும் போர் நிகழ்ந்தது. புலனருவா பகுதி, யாழ் ஆகிய இடங்களை சோழ தேசம் கவர்ந்தது. குலோத்துங்கன் காலத்தில் நிகழ்ந்த இந்தப் போர்கள் எந்த மன்னன் காலத்தில் நிகழ்ந்தது என்பது அறியப் படவில்லை. பராக்கிரம பாகு காலம் அல்லது அவனுக்கு அடுத்த மன்னன் காலத்திலோ சோழன் ஈழ தேசத்தில் பற்பல பகுதிகளை கவர்ந்து இருந்தான்.

கொங்கு நாட்டுப் போர்

ஈழ தேசத்தில் போர் புரிந்த காலத்திலேயே சோழன் கொங்கு தேசத்திலும் போர் புரிந்ததாக அறியப் படுகின்றது. ராஜாதி ராஜன் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த கொங்கு மன்னர்கள், சோழர்களுக்கு கப்பம் செலுத்துவதை நிறுத்தி விட்டு சுயேச்சை மன்னர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இதனால் வீறுக் கொண்டு எழுந்த குலோத்துங்கன், பாண்டிய தேசத்தினை கைப் பற்றியவுடன் தனது படைகளை சன்னத்தமாக வைத்திருந்து கொங்கு தேசம் மீது பாய்ந்தான். சோழர்களுக்கு ஈடு கொடுக்க இயலாத கொங்கு தேசத்தவர்கள் (இவர்கள் சேர மன்னர்கள் கிளை வம்சத்தவர்களாக அறியப் படுகின்றனர்) சோழர்களிடம் சரண் அடைந்தனர். இதனை அடுத்து தன்னிடம் அடைந்த கொங்கு மன்னனிர்கே அவனது தேசத்தினை அளித்து, தனக்கு அடங்கி கப்பம் கட்டுகின்ற ஒரு சிறிய அரசனாக அறிவித்தான்.

வடநாட்டுப் போர்
காகதீயா அரசு தனது விச்தரிப்பினை ஆரம்பித்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலம் தான். அது மட்டும் இல்லாமல் பாண்டியர்கள், ஹோய்சாளர்கள் தங்களது அரசுகளை விஸ்தரிக்கும் எண்ணங்களை தங்கள்ளுக்குள் விதைத்த காலமும் குலோத்துங்கனின் காலம் தான். பாண்டியர்களை நசுக்கி, ஹோய்சாளர்களை திருமண உறவின் மூலம் வலுப் படுத்தி சோழ அரசினை வியாபித்தான் சோழன். அப்போது காகதீய மன்னன் சோழனின் சிற்றரசர்களை தூண்டி விட்டு கலகம் செய்வித்தான். காஞ்சிபுரத்தினை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்கனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய மன்னன் இருந்தான். இதனால் வெகுண்ட சோழன், தனது படையுடன் சென்று சித்தன்ன தேவனை அடிப் பணிய வைத்து, காகதீய மன்னனை சோழ தேசம் பக்கம் நெருங்க விடாமல் செய்தான்.

மூன்றாம் பாண்டியப் போர்
விக்கிரம பாண்டியனின் இயற்கையான மறைவுக்கு பிறகு குலசேகர பாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் குலோத்துங்கன் பாண்டியர்களுக்கு செய்த உதவியை மறந்து, ஈழ அரசுடன் உடன்படிக்கை செய்தான். சோழ அமைச்சர்களை நாடு கடத்தினான், இதன் பொருட்டு மூன்றாம் பாண்டியப் போர் நிகழ்ந்தது.
குலசேகர பாண்டியன் தனது மரப் படையும் எழகப் படைதனையும் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனை எதிர்த்து காவிரி நதிக் கரை அருகே மட்டியூர் என்ற இடத்திற்கு அருகே சந்தித்தான். பாண்டியனுக்கும் சோழனுக்கும் நடந்த இப்போர் பல நாட்கள் நடந்ததாகவும் போருக்கு பின் மதுரை நகரினில் இருந்த பாண்டிய கொட்டைகளை தகர்த்தெறிந்தான். பாண்டியனோ போரினால் பின் வாங்கி தன் மக்களை காப்பாற்றிக் கொண்டு ஈழ தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்.

இந்த வெற்றிக்கு பின்பு சோழன் பாண்டிய தலைநகரத்தில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டான்.

குலோத்துங்கனின் சிறப்பு பணிகள்

மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் பற்பல சிறந்த பணிகள் தமிழகத்தே நிகழ்ந்தன.
1) திருபுவனம் கோவில்
2) மதுரை ஆலவாய் அழகனுக்கு பணிகள் நடந்தன
3) திருவாரூர் அம்பலத்தானுக்கு பொன் வேய்ந்தான்.
( 'நம் தோழர்' என்று குறிப்பிடப் படுகின்றான்)
4) சேக்கிழாரின் திருத் தொண்டர் புராணம்
5) நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் : இலக்கண நூல்கள்
6) மல்லன் வத்சராசன் மாகபாரததினை தமிழில் மொழி பெயற்றியது
7) பவனந்தியின் நன்னூல்.

Friday, November 21, 2008

இரண்டாம் இராஜாதிராஜ சோழன்

இரண்டாம் இராஜாதிராஜ சோழன்

விக்கிரம சோழனின் மருமகன் நெறியுடைய பெருமாளின் மகனே நமது எதிரிலிப் பெருமாள் எனப் படுகின்ற இரண்டாம் ராஜாதி ராஜ சோழன். இரண்டாம் ராஜா ராஜ சோழனின் மக்கள் இருவரும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முடியாத சிறு வயதினராய் இருந்தமையால் தனது மைத்துனன் மகனாகிய எதிரிலிப் பெருமாளை இளவரசனாக அறிவித்தான் இரண்டாம் ராஜா ராஜன்.

போர் வீரன்

முதலாம் ராஜாதி ராஜனை போலவே இரண்டாம் ராஜாதி ராஜனும் சிறந்த போர் வீரனாக திகழ்ந்தான். சோழரின் நேர் வாரிசாக இல்லா விடினும் சோழர்களின் திறந்தனைக் கொண்டிருந்தான் இந்த வீரன்.

பாண்டியப் போர்

இரண்டாம் ராஜாதி ராஜனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான குலசேகரப் பாண்டியனும் பராக்கிரம பாண்டியனும் தங்கள்ளுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

குலசேகரப் பாண்டியன் நமது சோழனின் உதவியை நாடினான், பராக்கிரம பாண்டியன் சிங்களன் பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.

தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னன் ஆகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான், அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப் பிடித்தான். இத்தனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றிவித்தான்.

பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்ப வில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னன் ஆக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இத்தனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். ஆதலால் சிங்கள மன்னன் ஜகத் விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது.

சோழர்களின் நுழைவு
அரியாசனத்தை இழந்த குலசேகரன் இரண்டாம் ராஜாதி ராஜனின் உதவியை கோரி சோழனின் மாளிகையை அடைந்தான். தன்னிடன் புகலிடம் அடைந்த குலசேகரனுக்கு உதவி செய்யும் பொருட்டு பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.
தோண்டிப் பட்டணத்தில் சோழர்களுக்கும் சிங்களர்குகும் முதல் போர் ஆரம்பித்தது. முதல் போரில் சிங்களப் படைகள் வெற்றிப் பட்டன. இதனால் சோழ மக்கள் அச்சம் கொண்டனர்.
அடுத்து நிகழ்ந்த போரில் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வெற்றிக் கொண்டான். சிங்கள மாதண்ட நாயகனையும், தண்ட நாயகன் ஜகத் விஜயனயும் கொன்று சோழர்களின் புகழினை நாட்டினான். அத்துடன் அல்லாமல் சிங்களத் தலைவர்கள் இருவரின் தலைகளையும் அரண்மனை வாயிலில் மாடி வைத்தான். இதனை அடுத்து குலசேகர பாண்டியன் அரியணை ஏறினான்.

சிங்களப் போர்
சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இத்தனை ஒற்றரிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான்.
சிங்களனின் தயாதியான சீவல்லபன் என்பவன் சோழனின் உதவியை கேட்டு சோழ தேசம் வந்தான், அவனுக்கு உதவும் வகையில் தனது படையை பராக்கிரம பாகுவினை எதிர்க்க அனுப்பினான். மாதோட்டம், புலைச்சேரி ஆகிய இரண்டு இடங்களிலும் சோழனுக்கும் சிங்களனுக்கும் கடுமையான போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் குறிப்பிடுகின்றது. அது மட்டும் இல்லாமல், இப்போரில் ஆயிரம் யானைகளை வென்று, பல்லாயிரம் மதிப்புள்ளவைகளை வென்று சோழனுக்கு அண்ணன் பல்லவராயன் காணிக்கை அளித்ததாக திருவாலங்காடுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

சிங்களனின் பாண்டிய உறவு
சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராஜாதி ராஜன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலை தனை அகற்றி அவர்களுக்கு கர்தூன் நாட்டினான்.
இத்தனை அறிந்த சோழன் குலசேகரன் பால் வேங்குண்டேழுந்தான், தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக் கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இத்தனை அடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். அண்ணன் பல்லவராயனின் இளவலான கருணாகரப் பல்லவனும் இப்போரினில் ஈடுப் பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றி நடைப் போட்டு பாண்டிய தேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக் கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு சிங்கள தேசத்திற்கே ஓடினர். போர்னில் தோற்ற குனசெகரப் பாண்டியனும் சிங்கள தேசத்தில் புகலிடம் அடைந்தான். இத்தனை அடுத்து வீரப் பாண்டியநிர்கே பாண்டிய தேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப் புரிந்து கப்பம் செலுத்தப் பணித்தான் சோழன்.

இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராஜாதி ராஜ சோழன்.

இறுதி நாடகள்

சுருங்கிக் கொண்டிருந்த சோழர்களின் வரைப் படத்தினையும் வீரத்தினையும் மலர்ச்சி அடைய செய்த பெரும் வீரனாக திகழ்ந்தான் இரண்டாம் ராஜாதி ராஜன். இவனது காலத்தில் சோழ மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருந்தனர். பாண்டியர்களையும் சிங்களர்களையும் வென்று cசோழர்களின் புகழினை இறங்காமல் காப்பாற்றினான் ராஜாதி ராஜன்.

ஆனால் காலங்களின் ஓட்டத்தில் இரண்டாம் ராஜா ராஜனின் மகன் வளர்ந்து பருவத்தினை அடைந்தான். அவனது புஜங்களும் போர் தினவெடுத்தன. ராஜாதி ராஜனின் போர் கலந்த சுற்று சுழலில் வளர்ந்த அவன், சோழர்களின் புகழினை உச்சிக்கு கொண்டு செல்ல எண்ணினான். தனக்கு உரிய அரச பீடம் கிடைக்காத என்று ஏங்கினான், இத்தனை அறிந்த ராஜாதி ராஜன் ராஜா ராஜனின் புதல்வனாகிய மூன்றாம் குலோத்துங்கனுக்கு அரச பதவி அளித்து தெலுங்கு தேசம் சென்றான்.


Wednesday, November 19, 2008

இரண்டாம் ராஜா ராஜ சோழன்

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பின் அவன் மைந்தன் இரண்டாம் ராஜ ராஜ சோழன், சோழ சக்கரவர்த்தியாக மகுடம் சூடினான். இவனது ஆட்சிக் காலத்தில் சேரர்களுடனும், பாண்டியர்களுடனும் போர்கள் நடந்திருக்கின்றன. அவை மட்டும் அல்லாமல் இவன் காலத்தே காவிரி நதி நீர் பிரச்சனை ஆரம்பித்து இருக்கின்றது.

சேரப் போர்

இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசா ராசா உலா கூறுகின்றது . இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்று ராசா ராசனுக்கு வாகை சுட்டினான்.

பாண்டியப் போர்

சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான் நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம்.

காவிரி பிரச்சனை :

"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
- இராச ராசா சோழனுலா

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

வைஷ்ணவத் தொன்று

தம் தந்தையை போல் சிவநேசன் ஆகிய ராஜ ராஜன் தன் தந்தைக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத் தளங்களுக்கு சேவைப் புரிந்தான்.
" விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்"
-என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர். இதன் மூலம் இவனைத் வைணவத் தொண்டினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

ராஜ ராஜேஸ்வரம் :

தன் தந்தையை போல் சிவப் பக்தனாகிய இரண்டாம் ராஜ ராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜ ராஜனைப் போல் அழியாப் புகழ் அடைய விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப் பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜெஸ்வரமும் ஒன்றாகும்.
தன் பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப் போலவே தனது புகழையும் சரித்திரத்தில் நிலைப் படுத்தும் பொருட்டு இந்தக் கலைக் கோவில் தனை கட்டினான். கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஓட்டக்கூத்தார் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான்.

எதிரிளிப் பெருமாள் (இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் )

இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் என்றப் பட்டப் பெயருடன் அரசனை எரியவன் அரசப் பீடத்தின் நேரடி வாரிசு கிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூடி விட்டு மரணம் அடைந்தான்.

Wednesday, November 12, 2008

காலை 8 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என்று கூரிவிட்டு முகத்தை தீவிரவாதி போல் செய்தித்தாளில் முகத்தினை மறைத்துக் கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் நம்து வீரத் தளபதியார் ஸ்ரீராம்.

8 மணிக்கு தான் கிளம்புகின்றார் நமது பிரம்மராயர் ஜோதிவேல் (சோழம்). 5 நிமிடத்தில் சேர்ந்துவிடுவேன் என்று 8 மணி அளவில் கையுன்தியில் தகவல் அனுப்பினேன் நான்(sms thaan). (முதல் நாள் இரவு வரை எனது வருகை எனக்கே முடிவாக வில்லை ஆனால் சோழம் orkut posting பார்த்தவுடன் கண்டிப்பாக போவது என்று முடிவு செய்தேன்).

8.30 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேர்ந்தோம். ஸூடா காபி பருகிவிட்டு a/c பேருந்திற்காக காத்திருப்பதா அல்லது காத்திருக்கும் ஜெயக்குமார் பொருட்டு சீக்கிரம் கிளம்புவோமா என்று ஒரு சிறிய ஆலோசனைக்கு பிறகு சாதாரண பேருந்தில் கிளம்பினோம். இடையே தனது விற்பனை திறமையை காட்ட முயன்றார் சோழம் அவர்கள். பேருந்தில் வாழை, பூக்கள், அன்னாசி மற்றும் பற்பலவற்றை விற்பனை செய்து தன் திறமையை காட்டினர் சோழம்.

முதற் சந்திப்பு:

வடபழனியில் முதல் தகவல், கிண்டியில் இரண்டாம் தகவல், அடையாரில் அடுத்த தகவல் என்று அடுத்தடுத்த தகவல்களுக்குப் பிறகு திருவான்மியூரில் சரியான பேருந்தை பிடித்தார் ஜெயகுமார். அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே எங்களைக் கண்டு கொண்டார் ஜெயகுமார்.

மாமல்லனின் வரவேற்ப்பு :

பல்லவ பூமியில் கால் பதித்த நொடியில் எங்களை வரவேற்றார் மாமல்லன். விருந்தோம்பல் தமிழர் பண்பாடு என்பதனை நிரூபிக்கும் வகையில் பசியில் இருந்த எங்களுக்கு பசியாற ருசியான பூரியும் கிழங்கும் பரிமாறப் பட்டது. ஆனால் கேட்காமலேயே bill போட்டு தந்துவிட்டார்கள். (உபயம் : ஜோதிவேல் @ சோழம்)

சோழ தேச திட்டம்
சோழ தேசப் பயணத்திற்கான திட்டத்தினை எங்கு அமர்ந்து பேசலாம் என்று யோசித்த வண்ணமே மஹாபலிபுரம் நகரினை வலம் வந்தோம். சுவையான நெல்லிக் கனி, மாங்காய் ஆகியவற்றை சுவைத்த வண்ணம் வலம் வந்தோம். ஆனால் என்ன கையில் இருந்த மாங்காய் coverai target செய்து வந்த வானரம் ஒன்று coverai அடித்து சென்றுவிட்டது. (LK வின் சதியாக இருக்க முடியுமோ என்ன சந்தேகம் எழுந்தது).

இன்னொரு வானரம் அழகாக பாட்டிலில் தண்ணீர் பருகியது காண்பதற்கு அருமையாக இருந்தது. (காண்க: ஸ்ரீராமின் புகைப்படங்கள்).

குழந்தை பருவத்திற்கு மாறினார் சோழம் அவர்கள், தனது வயதையும் மறந்து மலைகளில் வழுக்கிக் கொண்டே எறங்கி வந்தார். கலங்கரை விளக்கு அருகே அமர்ந்து சிந்திக்க இடம் கிடைக்கவில்லை, ஆதலால் ஸ்ரீராமும் சோழம் அவர்களும் குச்சி ஐஸ் வாங்கி தாகம் தனித்துக் கொண்டு பயணத்தினை தொடர்ந்தோம். இவ்வாறாக நால்வர் பேரணி ராயர் கோபுரத்தினை அடைந்தது. நல்ல இடம் பார்த்து அமர்ந்த எங்களுக்கு பருக மோர் கிடைத்தது, தஞ்சை பயணத்தினைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.

ஒரு வெள்ளி இரவில் தஞ்சைக்கு கிளம்பி, சனி விடியலில் தஞ்சை கோவில் தரிசனத்தினை முடித்துக் கொண்டு, அங்கிருந்து குடந்தை நகருக்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது. அத்துடன் சென்னையிலிருந்தே வாகனம் அமைத்து செல்லலாமா அல்லது தஞ்சை சென்று வாகனம் அமைத்துக் கொள்ளலாமா என்ற ஐயப் பாடு எழுந்தது, இதற்கான விடைதனை எத்தனை நபர்கள் வருகின்றார்கள் என்பதை பொறுத்து முடிவு செய்துக் கொள்ளலாம் என விடப் பட்டது.

தஞ்சை- குடந்தை-கங்கை கொண்ட சோழபுரம்- சென்னை.

மேற்குறிய வண்ணம் பயணத்தினை மேற்கொள்ளலாம் என ஒருமித்தக் கருத்து ஏற்ப்பட்டவுடன் சபை களையலாம் என்று முடிவு செய்து, கிருஷ்ணர் வெண்ணை நோக்கி நகர்ந்தோம்.

ஜோதியின் கலைப் பார்வை

மீண்டும் எங்களை வரவேற்றார் மாமல்லர். அதிகம் உண்டால் களைப்பு ஏற்படும் என்று ஜெயக்குமார் ஐயம் முற்றதால் அனைவரும் தயிர் சாதம் மட்டும் உண்டுவிட்டு கிளம்பினோம்.

அங்கே இருந்த பூம்புகார் அருங்காட்சியகத்தினுள் நுழைந்தோம் நாங்கள். கலைப் பார்வை வேறுபடும் என்பதனை ஜெயக்குமார் நிரூபிக்க எண்ணினாரோ அல்லது இயல்பாக நடந்ததோ தெரியவில்லை ஆனால் சோழம் அவர்களின் என்ன ஓட்டங்கள் அழகாக தெரிய வந்தது. ஜெயக்குமார் இரண்டு பாத்திர வேலைப்பாடு உடைய பொருட்களை வாங்குவதற்கு எண்ணி அலுவலரிடம் bill போட சொன்னார், நமது சோழம் அவர்கள் அவற்றைக் கண்டவுடன்,
"என்ன ஜெயக்குமார் cigarette ashtray வாங்கி விட்டீர்கள" என வினவினார்.

இந்தக் கேள்வியால் சிவநேச பக்தனான ஜெயக்குமார் மிகவும் வாடிப் போனார் என்றே கூரவேண்டும்.

"ஐயா சோழம் அவர்களே, திருநீற்றையும் குங்குமத்தினையும் இதில் போட்டு வைக்கலாமே என்று வாங்குகிறேன், இதை நீங்கள் எப்படி ash tray எண்ணக் கூரலாம்" என ஒருப் பிடி பிடித்தார்.

ஐவர் ரதம் :
பல்லவர்களின் மிக உயரிய கலை வேலைப் பாடுகளைக் கண்ட வண்ணம் நாங்கள் நால்வரும் வலம் வந்தோமே. திடீர் என சோழம் அவர்கள்ளுக்கு குழந்தை பருவ எண்ணங்கள் மேலோங்கிட கண்ணாம் மூச்சி ஆட்டம் விளையாட வேண்டும் என்றார். அவரை ஒருவாறு சரிக்கட்டி, யானை தும்பிக்கையின் பின்னால் மறைந்துக் கொண்டு இருக்குமாறு ஒரு புகைப்படம் எடுத்தப் பின்னர் தான் அவர் ஓய்ந்தார்.

ஸ்ரீராமின் கலை வெறியில் அனைத்து சிற்ப்பங்களும் அவரது காமெராவிடம் சரண் அடைந்தன. எங்கள் பசிக்கு ஸ்ரீ கொண்டு வந்திருந்த தீபாவளி பலகாரங்கள் காலி ஆயின. ஐவர் ரதம், நாங்கள் நால்வர் மட்டும் வந்து இருந்ததால் எங்களை ஏற்றிக் கொள்ளவில்லை.

கடல் அழைத்தது

இயற்கை அன்னை கடலின் அழைப்பை பெற்று நாங்கள் கடற்கரை சென்றோம். அங்கே pant கால்களை மடக்கி கொண்டு ரெடியாக நின்றார் நமது சோழம் அவர்கள். சரி நீச்சல் அடிக்கப் போகின்றார் என நினைத்தால் கரை ஓரத்தில் நின்றுக் கொண்டு ஸ்ரீராமையும் துணைக்கு அழைத்தார் சோழம். கடற்கரையில் சிறிது நேரம் கழித்து விட்டு, 18:30 குளிர் பேருந்தினை விட்டு விடக் கூடாது என்ற மேலோங்கிய சிந்தனையில் சீகிரமாக நடக்க ஆரம்பித்தோம்.

அங்கே ஸூடாக இருந்த பஜ்ஜி எங்களை டீக் கடைப் பக்கம் எழுத்து. அங்கே சென்று கொஞ்சம் பஜ்ஜிகளை கபளிகரம் செய்துவிட்டு, சுவையாக டி பருகி விட்டு மாமல்லை பேருந்து நிலையத்தில் ஆஜர் ஆகினோம் நாங்கள். a/c பஸ் சரியாக குறிக்கப் பட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்தது, அதில் ஏறி ஜெயக்குமார் seat பிடிக்க, நாங்கள் நால்வரும் சொகுசாக சென்னை மாநகரை நோக்கி பயணத்தினை தொடர்ந்தோம்.

Friday, November 7, 2008

ராமானுஜர்

குலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்துக் கொள்ளும் பொது அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை ராமானுஜர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது.

சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைனவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுஜனுக்கும் ஏற்ப்பட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுஜர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விஷ்ணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவ ஸ்தலமாக உள்ள இடத்தில் விஷ்ணு சிலை இருப்பது சிவ ஸ்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விஷ்ணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுஜர்.

விஷ்ணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லக்ஷ்மி கடாட்சம் அகன்று விடும் என்றும் விஷ்ணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலை தனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விஷ்ணுவின் புகழ் பாடிய ராமனுஜநிற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண் பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விஷ்ணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விஷ்ணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விஷ்ணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுஜநிற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுஜர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான்.

ராமானுஜர் ஸ்ரீரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விஷ்ணு சிலைதனை தில்லை கோவிலில் இருந்து அகற்றினார்.

Saturday, November 1, 2008

தில்லைத் திருப்பணி
தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நானுமாறு நார்பெருன்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரை சிறப்பித்தான் குலோத்துங்கன் என குலோத்துங்கன் உலாவில் கூத்தர் பாடுகின்றார். மேலும் தில்லையில் குலோத்துங்கன் செய்துவித்த பணிகளை பின்வருமாறு கூறுகின்றார்.


சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள் கோபுரத்தையும் பொன்
மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமா தேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும் படி சிவகாம கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுருத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்.

கடல் கொண்ட திருமால்

இவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத் தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால் திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிருவம்ப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லைநாதன் மேல் கொண்ட பற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முர்ப்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டு வந்த அந்தணர்கள் இடையுறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட சோழன் பள்ளிக் கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பி விட்டான் என தக்கையாப் பரணியில் கூததன் கூறுகின்றார்.

Tuesday, October 21, 2008

களப்பாளர்கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிம்மவிட்டுணு பல்லவன் களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது. களப்பிரர்கள் பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். அச்சுத களப்பாளன்கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன். இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.வீழ்ச்சிஅச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும் பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர

Sunday, October 19, 2008

விக்கிரம சோழன்
விக்கிரம சோழன், முதலாம் குலோதுங்கனுக்கு பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூடப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம்.

வேங்கிப் போர்
சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனின் மறைவுக்கு பின் சாளுக்கிய அரசர்கள் வளு இழந்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் மரபு வழி பூமியாகிய வேங்கியை இழக்க விக்ரம சோழனும் விரும்பவில்லை ஆதலால் தனது மகன் அபயகுலோத்துங்கனின் தலைமைகள் ஒரு படையினை வெங்கிக்கு அனுப்பி வைத்தான். சோழர்களுக்குத் துணையாக சோட நாட்டுத் தலைவர்களாகிய கொனகண்டேஸ்வரனும் கிரிபச்சிமாவும் துணை இருந்தனர்.
இந்த போரின் மூலம் சோழ தேசம் எந்த எல்லையையும் விக்கிரம சோழனின் காலத்தில் இழக்காமல் இருந்தது.

கலிங்கப் போர்
குலோத்துங்கனின் காலத்திற்கு பின்பு இவன் காலத்திலும் கலிங்கப் போர் நடைப் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் காலத்திலும் விக்கிரம சோழனே படைகளுடன் சென்றுள்ளான். கருணாகரப் பல்லவன் விக்ரம சோழனின் காலத்திலும் துணை இருந்துள்ளதாக இந்த போரின் குறிப்புகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இந்தப் போரினை அடுத்து நிகழ்ந்த கங்காவடி போரினிலும் கலந்துக் கொண்டுள்ளான். ஆதலால் கருணாகரன் குலோத்துங்கன் காலத்திலும் விக்கிரமன் காலத்திலும் சோழர்களுக்கு துணை இருந்துள்ளான் என்பதனை அறிந்துக் கொள்ளலாம். விக்கிரம சோழன் கலிங்கத்தின் மீது படை எடுத்தமையை ஓட்டக்குத்தர் உலா மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்த கலிங்கத்து போரிலும் சோழர்கள் வெற்றிப் பெற்றமையால் சோழ நாடு சுருங்காமல் இருந்தது.

கங்காவடிப் போர்

இந்தக் காலக் கட்டமே ஹோய்சாளர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற காலம் ஆகும். சாளுக்கியர்களின் காலம் முடிந்து, ஹோய்சாலர்களின் ஆட்சிக் காலம் ஆரம்பம் ஆகிய காலத்தே நிகழ்ந்த இந்தப் போரின் கங்காவாடிப் பகுதியை சோழர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர். ஆதலால் விக்கிரம சோழன் ஹோய்சாளர்கள் மீது போர் தொடுத்து கங்காவாடிப் பகுதியை மீட்டான்.

தேச அளவு

தன் தந்தையின் காலத்தில் பலப் போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். இலங்கை தேசம் புலனருவா பகுதி வரை சோழ அரசு விரிந்து இருந்தது.

திருசிற்றம்பலம்

விக்கிரம சோழன் தீவிர சிவ பக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான்.

தியாகசமுத்ரம்

விக்கிரம சோழலனின் ஆட்சிக் காலத்தில் மழை இல்லமால் சிறிது வறுமை தலை தூக்கியது. ஆதலால் விக்கிரமன் தனது மக்களுக்கு பற்பல தானங்கள் வழங்கி வருமைகளை களைந்தான். ஆதலால் அவனுக்கு இந்தப் பெயர் கிடைத்தது.

Monday, October 6, 2008

குலோத்துங்க சோழன் I

கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில்,இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச்சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான்.
இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு சிறிது சுருங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை,விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.
நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

குலோத்துங்கனின் சோழ மரபு உரிமை

ராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த aஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.

ஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. kuzhap

குழப்பங்கள்:

சோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.

சாளுக்கியப் போர்

அரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய சோமேச்வரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.

படைத் தளபதிகள்:

சாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.

1) இளவரசன் ராஜேந்திர சோழன்

குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.

2) அரையன் காளிங்கராயர்:

குலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன்.

3) சேனாதிபதி இருங்கோவேள்

4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.

பாண்டிய சேர யுத்தங்கள்:

குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.

சாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.

படைத் தளபதிகள்:

1) கருணாகரப் பல்லவன்

கருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.

2) உடையான் ஆதித்தன்:

உடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.

3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்

4) அழகிய மணவாள நம்பி

5) ராஜ ராஜ மதுராந்தகன்.

இவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.

சேர யுத்தம் :

காந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.

கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கநிர்க்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.

படைத் தளபதிகள்:

கருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.

1) கரனை விழுப்பரையர்

2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி

இலங்கைப் போர் :

வீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.

ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.

சிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.

சாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்ப்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.

படைத் தளபதிகள்:

1) இளவரசன் ராஜேந்திரன்

2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்

3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்

முதலாம் கலிங்கத்துப் போர்

குலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும்.

படைத் தளபதிகள்:

குலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.

இரண்டாம் கலிங்கத்துப் போர்

இந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.

இப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது.

படைத் தளபதிகள்:

1) கருணாகரப் பல்லவன்

2) அரையன் காளிங்கராயர்

3) அரையன் ராஜ நாராயணன்

வெளிநாட்டு வணிகத் தொடர்புகள்

இலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.

சீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.

அமைச்சரவை

வாசுதேவ பட்டர்

குலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.

பிரம்மராயர் பார்த்திவேந்திரர்

குலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.

படைத் தலைவர்கள்:

1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்

Sunday, October 5, 2008

சோழ சாம்ராஜ்யம்

சோழ சாம்ராஜ்யம்

பாரதத்தின் வலிமை மிகுந்த சாம்ராஜ்யங்கள் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய பேரரசுகளில் ஒன்று சோழ சாம்ராஜ்யம். பாரதத்தின் தெற்கே தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்து கடல் கடந்து தங்கள் சாம்ராஜ்ய பெருமைகளை பரப்பிய உயர் குடியாக விளங்கியவர்கள். வாணிபம் பொருட்டு மட்டும் கடல் கடந்தவர்கள் அல்லர் அரசு விஸ்தரிப்பின் பொருட்டும் கடல் கடந்தவர்கள். தமிழும், கலையும் பேணி காத்தவர்கள் சோழ அரசர்கள். அவர்களைப் பற்றிய ஒரு படைப்பாக இந்த வலைத்தளம் உருவாகின்றது.

காவேரியுடைத்த மண் :
காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

வரலாற்றின் செப்பேடுகளின் ஆட்சி ஆண்டுகள் :
கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சின்னங்கள்:
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

Friday, October 3, 2008

அதிராஜேந்திர சோழன்

அதிராஜேந்திர சோழன்

அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான். தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. வீரராஜேந்திரன் இறப்பிற்கு பின் அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது.

இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன்காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.

வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் ஒருவனின் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.

அதி ராஜேந்திரனின் சகோதரி கணவனாகிய விக்கிரமாதித்தன் சோழ தேசத்தில் விளைந்திருந்த குழப்பத்தை பயன்படுத்தி தன்னை சோழ தேசத்தில் திடப் படுத்திக் கொள்ள திட்டமிட்டான். இவனைப் பற்றிய பாணர் சரித்திரத்தில், விக்கிரமாதித்தன் அதி ராஜெண்டிரநிற்கு உதவும் பொருட்டு சோழ தேசத்தில் இருந்ததாகவும் குழப்பங்களை களைந்து ஆட்சி செய்ய உதவிய தாகவும் கூறுகிறார். ஆதலால் இவர்களது குறிப்பில் குலோத்துங்கன் பற்பல இடையூறுகளை அதி ராஜேந்திரன் காலத்தில் விளைவித்ததாகவும் ஆட்சியை அபகரிக்க முயன்றதாகவும் குறிக்கப் பட்டுள்ளது ஆனால் அப்படி இருப்பின் குலோத்துங்கன் சோழ தேசத்தில் விரோதியாகவே மாறி இருக்க முடியுமே தவிர மன்னனாக இருந்திருக்க முடியாது ஆதலால் பாணரின் குறிப்புகள் தவறாக இருக்க வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறாக பற்பல ஆராய்ச்சிகள் இருந்தாலும் அதி ராஜேந்திரனின் இறப்பிற்கும் குலோதுங்கநிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக குறிக்கின்றது கலிங்கத்து பரணி. குலோத்துங்கன் இளமை காலத்தில் கடாரத்திலும் சீன தேசத்திலும், சக்கர கோட்டத்திலும் இருந்ததாக பயில்கின்றது. அதி ராஜேந்திரனின் இறப்பிற்கு பிறகு அவன் சோழ தேசம் வந்து குழப்பங்களை அகற்றி அரியணை ஏறி இருக்க வேண்டும்.

Thursday, October 2, 2008

சதுர்வேத மங்கலம், மணிமங்கலம்

"தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி"

கலையும் தமிழும் புத்துயிர் பெற்றது பல்லவர்கள் காலத்தில். களபிறர்கள் காலத்தே சமஸ்கிருதமும் சாகிருதி என்ற மொழியும் தமிழகத்தில் தடம் பதித்து இருந்த காலத்தில் தமிழுக்கு தொண்டாற்ற பிறந்தவர்கள் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும். தமிழுக்கு தொண்டாற்ற அவர்கள் இருந்த போது அவர்களுக்கு சேவை செய்யவும் கலைதனை வளர்க்கவும் உறுதுணையாய் இருந்தவர்கள் பல்லவர்கள். அந்த பல்லவர்கள் தங்கள் ஆட்சிதனை புத்துயிர் பெற்ற இடம் இந்த மணிமங்கலம்.

சாளுகியர்களிடம் மகேந்திர வர்மர் தோற்ற இடம் இந்த மணிமங்கலம். தங்கள் தோல்வி தனை களைந்து வெற்றிக் கொடிதனை ஏற்ற மாமல்லன் புறப்பட்ட இடமும் இந்த இடம் தான். ஆதலால் தமிழுக்கு புத்துயிர் ஊட்டிய பல்லவர்களின் முக்கிய இடமாக திகழ்ந்த இந்த மணிமங்கலத்தில் சிறப்புற விளங்கிய சிவாலயம் இன்று கலை இழந்து சிதைந்த நிலையில் கவனிப்பாரற்று இருக்கின்றது.

தங்களின் புத்துயிர் பெற்ற மண்ணை நினைவிடம் ஆக்க கலைதனை கை கொண்டான் மாமல்லன் . சிறிய கோவிலாக இருந்திருக்க கூடிய இந்த கைலாசநாதர் கோவில் சோழர்கள் காலத்தில் பெரிதும் மாற்றப் படிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

இந்த கைலாசநாதர் கோவிலின் அருகே உள்ள தர்மேஸ்வரநாதர் கோவிலும் சிறிது சிறிதாக பழுது அடைந்து வருகின்றது. இந்த கோவிலும் பல்லவ காலத்தில் கட்டப் பட்ட கோவிலாகும்.

சதுர்வேத மங்கலம்

சதுர்வேத மங்கலம் என்று சாசனங்களில் குறிக்க பட்டிருக்கும் இந்த ஸ்தலம் தமிழர்களின் மிகப் புகழ் வாய்ந்த ஸ்தலம் ஆகும். நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் நாயன்மார் அவர்களால் பாடப் பட்ட ஸ்தலம். நரசிம்ம பல்லவனின் படை மாதண்ட நாயகனாகிய (சேனாதிபதி) இந்த பரஞ்சோதியே பின்னாளில் சிறுத்தொண்ட நாயன்மார் ஆனவர். தானங்களில் சிறந்த தானம் அன்னதானம், அந்த அன்னதானத் தொண்டினை இந்த கோவிலில் தொடங்கி வைத்தவர் சிறுத்தொண்ட நாயன்மாரே.

சதுர்வேத மங்கலம் என்று பேர் பெற்ற இந்த ஸ்தலமே இன்றைய மணிமங்கலம் என்னும் கிராமம் ஆகும். வரலாற்று சிறப்பு பெற்ற இந்த ஸ்தலத்தில் புனரமைப்பு பனி நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.


பாலாபிஷேகம்

இந்தக் கோவில் புனரமைப்பு பணியினை ARULMIGU THIRUKAILAYANATHAR GNANAMBIGAI EDUCATIONAL & CHARITABLE டிரஸ்ட்ஏற்றுக் கொண்டுள்ளது. இவர்களது மேற்பார்வையில் 2008 ஜனவரி மாதம் 20 ம நாள் பாலபிஷேகம் சிறப்புற நடைப் பெற்றது. மேலும் இந்த கோவிலில் இறைவனுக்கு தனி தனியாக சந்நிதிகள் கட்டப்படவுள்ளன.

இறைவன் மேல் பாரத்தினை ஏற்றி வேலைதனை தொடங்கி விட்டார்கள் இதோ இன்னொரு விண்ணகரம் கட்டப் படுகின்றது. உலக ரட்சகன் ஆபத்பாண்டவன் அருளோடு ஆரம்பித்திருக்கும் இந்த புனரமைப்பு வேளையில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

Wednesday, October 1, 2008

ராஜகேசரி வீர ராஜேந்திர சோழன்


இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன். இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான்.

இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

போர்கள்
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

சாளுக்கியப் போர்கள்
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.

அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியில் மன்னனாக்கினான்.

கலிங்கத்துப் போர்
வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. அத்துடன் மட்டும் இல்லாமல் சோழர்களின் வணிகச் சந்தைக்குப் பிரச்சனையாக முளைத்தது இந்த கலிங்க நாடு. சாளுகியர்களுக்கு உதவும் வண்ணம் கலிங்கர்கள் தமிழர்களை அடிமைப் படுத்த ஆரம்பித்தனர், இவர்களது இந்த செய்கை தமிழ் காவலர்களாகிய சோழர்களை இவர்கள் மீது படை எடுக்க செய்தது. இந்த போரின் தொடர்ச்சியே குலோத்துங்கனின் காலத்தில் நிகழ்ந்த கலிங்கத்துப் போரின் முக்கிய காரணமாகும். இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான்.

இலங்கைப் போர்
சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான ரோகனா பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டிய சோழன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. விஜயபாகு இலங்கை தேசத்தின் அடிமைத் தனத்தை களைந்து சுதந்திர தேசமாக்க பாடுப்பட்டான். அவனது வீரத்துக்கு பரிசாக இலங்கை தேசதினருக்கு சுதந்திர தாகமும் பிறந்ததால் சோழர்கள் பிற்காலத்தில் இலங்கையிலிருந்து பின் வாங்க வேண்டி இருந்தது.

கடாரப் படையெடுப்பு
வீரராஜேந்திரனின் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை.
போர் தினவு எடுத்த தோள்களுக்கு எங்கு போர் நடக்கும் என்றும் சிந்திக்க மட்டுமே தோன்றும் ஆனால் வீர ராஜேந்திரன் காலத்தே போர் தினவு எடுத்து அலைந்த இந்த இளவலுக்கு. இவன் தோள் தினவின் பொருட்டு பிறந்தது சக்கர கோட்டத்து போர். ஆம் அந்த இளவல் நம் வீர நாயகன் "அநபாயன்" என்று வளர்ந்த அம்மாங்க தேவியின் புதல்வன் "குலோத்துங்க சோழன்" தான்.
சக்கர கோட்டத்தில் போர் புரிந்துக் கொண்டிருந்த அநபாயனை வரவழைத்து கடாரத்திற்கு அனுப்பி வைத்தான் வீர ராஜேந்திரன். கடாரப் பயணத்திற்குப் பின் குலோத்துங்கன் சீன தேசம் சென்றதாக வரலாறு இயம்புகிறது.

சாளுக்கியருடனான தொடர்பு
முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

வீர ராஜேந்திரன் மக்கள்
வீர பாண்டிய சோழன், அதி ராஜேந்திர சோழன் என்று இரண்டு புதல்வர்களும் மதுராந்தகி என்று ஒரு மகளும் வீர ராஜேந்திரனுக்கு உண்டு. மதுராந்தகியை விக்கிரமாதிதன்னுக்கு திருமணம் முடித்து கொடுத்தான் சோழன். இதன் பொருட்டே விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரனின் மரணிதிற்குப் பின்பு அதி ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அரசியலில் ஈடுப்பட்டான். அவன் அதி ராஜேந்திரனுக்கு உதவி செய்ததாக பாணர் பாடியுள்ளார்.

Saturday, September 27, 2008

இராஜாதிராஜன்

இராஜேந்திர சோழனின் காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும். இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் சாளுக்கியர்கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியரோடு போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் நடைபெற்ற போரில் இறந்தான்.


முதலாம் இராஜேந்திரனின் மக்கள்

வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய இராஜராஜனும், அவனுடைய திறமை மிக்க மகன் இராஜேந்திரன் காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர்.

இராஜேந்திரனுக்குப் பிறகு அரியணையேறியவன் மூத்த மகன் இராஜாதிராஜன் என்று வீரராஜேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. இராஜேந்திரனை அடுத்து அரியணையேறிய மூன்று மன்னர்களின் கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இராஜாதிராஜனின் 35-ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று 'தம்பித் துணைச் சோழ வளநாடு' என்ற முக்கியமான பெயரைக் குறிப்பிடுகிறது. இப்பெயர், 'திருமகள் மருவிய' என்று தொடங்கும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ளா செய்தியை நினைவூட்டுகிறது. இம்மெய்க்கீர்த்தியில் சாளுக்கியருக்கு எதிரான போரில் எவ்வாறு தன் மூத்த சகோதரன் இராஜாதிராஜனுக்கு பெருந்துணையாக இருந்தான் என்பதை இராஜேந்திரன் கூறுகிறான். வீரராஜேந்திரன் என்பவன் இராஜேந்திர தேவனின் தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை இராஜேந்திரன் அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன.

இளவரசன் ராஜ மகேந்திரன்

ராஜாதி ராஜனின் மைந்தன் பெயர் ராஜ மகேந்திரன், தந்தையை போலவே மகனும் ஒரு மிகப் பெரிய வீரன் என்ற பெயர் பெற்றான். இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு முன் இவன் சோழ நாட்டினை ஆட்சி செய்தான் என்றும் கூருவர். ஆனால் சரித்திர சான்றுகள் கூறுவது யாதெனின், ராஜ மகேந்திரன் ராஜாதி ராஜன் காலத்தில் இளவரசு பட்டம் பெற்றான் ஆனால் மன்னனாக ஆகவில்லை. மேலும் இவன் பாண்டிய சோழன் என்ற பெயரஇல் பாண்டிய தேசத்தில் பதவி வகித்தான். இந்த ராஜ மகேந்திரனே ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ராஜ மகேந்திரன் பிரகாரத்தை கட்டியவன்.

இலங்கைப் போர்

ராஜேந்திரனின் காலத்தில் இலங்கையின் மன்னன் மகிந்தன் கைது செய்யப் பட்டு சோழ நாட்டில் சிறைதனில் அடைக்கப் பட்டன். அவன் பன்னிரு மாதங்கள் சிறையில் இருந்து பின் இறந்தான் என மகாவம்சம் கூருகின்றது. மகிந்தனின் மைந்தன் காசப்பா தன் நாட்டின் வளர்ச்சி தனிக் கருத்தில் கொண்டு சோழர்களை எதிர்த்து நிர்க்கின்றான். புரட்சி தீயை சுடர் விட்டு பிரகாசிக்கின்றான் ராஜாதி ராஜ சோழனின் காலத்தில். ஆனால் சோழர்கள் வீறு கொண்ட காலமாதலால் காசப்பாவின் புரட்சி வேள்வி அழிந்து போனது.

வீறு கொண்டு எழுந்தான் காசப்ப்பவின் புதல்வன் விக்ரமபாகு. விக்கிரம பாண்டியனின் துணைக் கொண்டு ரோகனதிளிர்ந்து தொடர்ந்தான் தன் விடுதலைப் போராட்டத்தை. ராஜாதி ராஜனின் மாதண்ட நாயகன் வாணகோவரையன் தலைமையில் விக்கிரமபாகுவின் போராட்டங்கள் தொடர் தோல்விதனை அடைந்தன. தோல்வியை மட்டுமே கண்ட விக்கிரம பாகுவின் மனதிலே வீற்றிருந்தது விடுதலை என்னும் தாகம். தனது தாகத்தினை தன் மகன் விஜயபாகுவிற்கு போதித்தான் விக்கிரமபாகு. இவ்வாறு தொடர்ந்து இலங்கையில் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. ராஜ ராஜனின் காலத்தில் ஆரம்பித்த இந்த இலங்கையின் விடுதலை போராட்டம் ஓய்வே இல்லாமல் தொடர்ந்தது சோழர்களின் வீழ்ச்சி வரை.

சாளுக்கிய பெரும் போர்கள் :

கம்பிளி ஜெயஸ்தம்பம்

கலிங்கத்து பரணியில் குறைப்படும் ராஜாதி ராஜனின் புகழ் கிரீடத்தில் சொல்லப் படும் வெற்றி இந்த கம்பிளி ஜெயஸ்தம்பம். சோழர்களுடன் தொடர்ந்து போர் புரிந்த ஓர் அரசு சாளுக்கிய அரசு , ஒருவரை வென்று இன்னொருவர் தங்கள் புகழினையும் எல்லைதனையும் விஸ்தரித்த கதை அது.

சாளுக்கியர்களின் மன்னனாக சொமேச்வரன் முடி ஸூடிய போதினில் ஆரம்பித்த போர் இது. வேங்கி எனபது இந்த இரு மன்னர்களின் நடுவினில் சிக்கிக் கொண்ட ஓர் தேசமாகவே கருத வேண்டும். வெங்கியின் சரித்திரம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று, ஏன் எனில் குலோத்துங்கனின் கதையின் பிறப்பிடம் அது தான்.

கிருஷ்ணை நதியின் கரைதனில் நடந்தது அந்தப் போர். ஓர் கழுகு தான் மிகவும் உயர்ந்த அளவில் பறக்கிறோம் தன்னால் புவிதனில் நடக்கின்ற எதையும் காண முடயும் என்ற இறுமாப்பில் பறந்துக் கொண்டிருந்தது . அந்தோ அங்கே ஒரு குன்று திடுமென்ன ஓரிடத்தில் முளைத்திருந்ததினைக் கண்டு யாது அந்த குன்று என தெரிந்துக் கொள்ளும் பொருட்டு உயரப் பறந்தது. கழுகிற்கு அந்தக் குன்றின் முதலும் தெரியவில்லை முடிவும் தெரியவில்லை, இன்னும் சற்று உயரப் பரந்த போது தான் அதற்குத் தெரிந்தது அது கிருஷ்ணை நதிக் கரை என்பது. அங்கே நிகழ்ந்த போரினால் இறந்த வீர்களின் உடல் தான் அந்த திடீர் குன்றின் காரணம் என்பதை புரிந்தது. தனக்கு அனைத்தும் தெரியும் என்று இறுமாப்பில் இருந்த கழுகிற்கு புரிந்தது அங்கே நடந்திருக்க கூடிய போரினைப் பற்றி.

மாதண்ட நாயகன் வாணகோவரையன் தலைமையில் ராஜாதி ராஜன் வெற்றிகரமாக வெற்றி தேவியினை தன் பக்கம் கொண்டு சாளுக்கியர்களின் தலைநகரம் கல்யாணி என்னும் நகரத்தினை கொளுத்தி தன் வெற்றிதனை ஜெயஸ்தம்பம் கொண்டு நிறுவினான். இப்போருக்கு பின் வாணகோவரையன் வேண்டுகொல்லுக்கு இணங்க சக்கரவர்த்தியை மகுடம் கொண்டான் ராஜாதி ராஜன். இப்போரினில் வாணகோவரையன் இறைமை எய்தினான்.

இரண்டாம் சாளுக்கிய போர் (கொப்பத்து போர்)

சொமேஸ்வரனின் தோல்விக்கு பின் அவனது மகன் ஆகவமல்லன் சாளுக்கிய தேசத்தின் ஆட்சி பொறுப்பினை பெற்றான். எல்லைப்புறத்தில் இருந்த சோழர்களை துரத்தினான். இந்த காலத்தில் தான் இலங்கையிலும் போர் நடந்துக் கொண்டிருந்தது. விக்கிரமபாகுவின் மரணத்திற்கு பின் மீண்டும் சாளுக்கியர்களுடன் போர் தொடர்ந்தான் ராஜாதி ராஜன். தன் மகனை இழந்திருந்த ராஜாதி ராஜன் தன் தம்பி இரண்டாம் ராஜேந்திரனை இளவரசனாய் அறிவித்தான். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான், தம்பிகள் உடையான் படை எடுக்கவே அஞ்சுவான்". இரண்டு தம்பிகளும் போரிற்கு செல்ல முன் நிற்க தன் இல்லையா தம்பி தனை சோழ தேசத்தினில் தங்க செய்து, இலங்கை மீதும் பாண்டிய தேசம் மீதும் கருத்தினை இருக்கவும் அவனது பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்றும் ராஜேந்திரன் படை வீட்டில் மட்டும் தான் இருப்பான் போரினை தான் தான் முன்னின்று செய்ய போவதாகவும் கூரி இளையவனை சோழ நாட்டில் இருக்க செய்தான்.

ராஜாதி ராஜனை படை வீட்டில் இருத்தி தான் போருக்கு செல்வதை கூரிய முதல் தம்பியிடம் "நீ படைவீடின் பின்னால் இருப்பதால் நம்மை பின்னால் இருந்து சாளுக்கியர்கள் தாக்க முயலும் போது நீ தான் அவர்களது முதல் குறியாய் இருப்பை. உன்னை ஆபத்து எப்போதும் சூழ்ந்திருக்கும்" என்று கூரி. இரண்டாம் ராஜேந்திரனை படை வீட்டில் இருத்தி, போருக்கு முன் நின்றான் ராஜாதி ராஜன் என்னும் சோழ மாவீர சக்கரவர்த்தி.

மாதண்ட நாயகன் பராந்தகன் ஏற்றான் போரின் திட்டத்தினை, ராஜாதி ராஜனின் விருப்பம் போல் நிகழ்ந்தது போர். பராந்தகனிடம் தோற்றான் ஜெயசிம்மன் என்னும் ஆகவமல்லன் தளபதி. வேங்கியின் மன்னன் ராஜ நரேந்திரன் சோழர்களின் யானைப் படைத்தனை கையாண்டான். வெற்றி தேவதை ராஜாதி ராஜனின் வீர வாளினையும் அவன் கரங்களையும் பிடித்திருந்தால். சுது செய்தனர் சாளுக்கியர்கள்...

தன் பட்டத்து யானை மீதிருந்து போர் செய்துக் கொண்டிருந்த சோழனை நோக்கி வந்தான் ஆகவமல்லன் துணை இருந்த ஜெயசிம்மன் சமாதானம் சொல்லிக் கொண்டு. அவ்வாறு வந்த ஜெயசிம்மன் திடும்மென்று தன் வீரர்களுக்கு ஆணையிட வீரர்கள் ராஜாதி ராஜனை சூழ்ந்து அம்பு மழை பொழிந்தனர். இவ்வாறு வஞ்சகத்தினை எதிர்பார்க்காத ராஜாதி ராஜனின் மேல் அம்பு மழை பொழிய அவன் அப்போர் களத்தினில் உயிர் விடுகின்றான். பராந்தகன் ஜெயசிம்மனை தன் வேல் கொண்டு கொள்கின்றான், அவனை சூழும் சாளுக்கிய வீரர்களிடம் அவனும் பலியாகிறான்.

தலைமை தாங்க ஆளில்லாத சோழ வீரர்கள் பின் வாங்குகின்றனர். போர்க்களத்தில் நிகழ்ந்ததை உணர்கின்றான் இரண்டாம் ராஜேந்திரன் வீறு கொண்டு எழும் வேங்கையாய் உரைக்கிறான் தன் வீரர்களிடம் "அஞ்சேல் அஞ்சேல், வெற்றி அல்லது வீர மரணம். பழி வாங்குங்கள் அந்த சாளுக்கியர்களை". ராஜேந்திரன் தன்னை அப்போர் களத்தினில் தன்னையே மன்னனாக அறிவிக்கின்றான். "யானை மேல் துஞ்சிய ராஜாதி ராஜனின்" உடலினை காப்பாற்றி வீரர்களிடம் ஒப்படைக்கும் ராஜேந்திரன், தன் படையை கட்டுக்குள் கொண்டு வந்தான். வீறு கொண்டு எழுந்த ராஜேந்திரனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் ஆகவமல்லன் தன் படை தனிப் பின்னுக்கு எழுத்து போர்கலத்திளிர்ந்து தப்பித்து ஓடுகின்றான். தன் அண்ணனின் மரணத்திற்கு பழி வாங்கும் பொருட்டு கொப்பம் நகரினை அழிக்கின்றான் இரண்டாம் ராஜேந்திரன். வெற்றி வாகை முடிக் கொண்டு சோழத்திற்கு திரும்புகின்றான் இரண்டாம் ராஜேந்திரன்.

தன் இறுதி காலம் வரை போர்களத்திலேயே இருந்து சோழ மகா சக்கரவர்த்தியாக தன்னை நிலை நிறுத்துகின்றான் ராஜாதி ராஜ சோழன். தன் தந்தை காலத்தினில் போர்கலதினில் நுழைந்த ராஜாதி ராஜன் தன் மூச்சு முடியும் மட்டும் மகா வீரனாக உலா வருகின்றான்.

போர் தவிர ஏனைய விஷயங்களில் ஆர்வம் அதிகம் இல்லாதவன் என்னினும் இவன் காலத்தில் சிதம்பரம் தில்லை நாதர் ஆலயத்தில் போற்குறை வேயப் பட்டிருக்கின்றது. ஸ்ரீரங்கனதார் கோயிலிற்கு பிரதான சுற்று சுவர் எழுப்ப பட்டிருக்கின்றது.

திரலோக்கியம் என்ற ஒரே ஒரு மனைவியைக் கொண்டவன். சோழர்களின் ராமனாக இருந்தவன். மகனையும் போரினால் பழி கொடுத்தவன். சோழர்களின் புகழிற்காக உயிரை மாய்தவன் இந்த வீர திருமகன்.

ராஜாதி ராஜ சோழன்

ராஜாதி ராஜ சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்தி ஸ்ரீ
திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள்
தொல்குலம் விளங்கத் தோன்றி மல்கிய
வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும்
குடதிசை மகோதையும் குணதிசைக் கடாரமும்
தண்டினில் கொண்ட தாதைதன் மண்டல
வெண்குடை நிழலெனத் தாங்குடை நிழற்றித்
திசைதோறும் செங்கோல் ஓச்சி இசைகெழு
தென்னவன் மான பரணன் பொன்முடிப்
பருமணிப் பசுந்தலை போருகல்த தறிந்து
வேணாத் தரசரைச் சோணாட் டோதிக்கிக்
கூவகைத் தரசரைச் சேவக தொலைத்து
வேலைக்கோல் காந்தளுர்ச் சாலைகள mஅருத்தர்பின்
தங்குலத் தவநிபர் நன்குதறு தகிமயில்
அரசியலுரிமை முறைமை லேத்தி
வில்லவர் மீனவர் வேல்குலச்ச லுக்கியர்
வல்லவர் முதலாய் வணங்கி வீற்றிருந்து
தராதலம் படைத்த திக்கேழும் துதிகேழு
செயங்ககொண்ட சோழ நேனுன்னும் மதிகேழு
கோவிராச கேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ
தேவர்க்கு யாண்டு.....

Tuesday, September 23, 2008




ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுரை நாடும்
துடர்வன வெளிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சுழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரன் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் எழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சிந்தற முடியும் இந்திரன் அறமும்
தென்திரை ஈழ மண்டலமும் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தோல் பெருங்காவல் பல்பழன் தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரன் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயங்கோடு பழிமிக முயன்கியில் முதுகிட்டு
ஒலித்தசைய சிங்கன் அளப்பரும் புகழோடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதி குலப்பேறு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிற்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமனைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுனித் தேசமும்
அயர்வில்வன் கீர்த்தி யாதினாக ரவையில்
சந்திரம் தொல்குலத் திந்திர ரதனை
விளையமார்க் காலத்துக் கிளையோடும் பிடித்துப்
பலதனத் டுநிரை குலதனக் குவியும்
கிட்டருன் செரிமிலை யோட்ட விஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும்
தன்மை பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சுரணை முரனுரத் தாக்கித்
திக்கனைக் கீர்த்தி தக்கன லாடமும்
கோவிந்த சாந்தன் மாவிழின் தொடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பன் தாரமும்
நித்தில நெடுங்கடல் அத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகாலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்ம
பொருகடல் கும்பக் கரியோடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகனகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தறதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கண்மணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யுறேயில் தொன்மலை யுறும்
ஆழ்கடல் அகழ்சுள் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காபுறு நிறைபுனல் மாப்பப் பாலமும்
காவல் புரிசை மேவிளிம் பங்கமும்
விளைபந்த் துருடை வலைப்பன் தூரூம
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கொர்புகழ்த் தலைத் தக்கொலமும்
தீதமர் வல்வினை மாதமாளிங்கமும்
தெனக் கலர்போழில் மாநக்க வாரமும்
டுகதர் காவல் கடுமுரன் கடாரமும்
மாப்போருன தந்தார் கொண்ட
கோப பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு......












இராஜேந்திரன் மெய்க்கீர்த்தி
[கடாரம் கொண்டான்
]


"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினேன்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜ்யோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன் பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன்(லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருக்கிறது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடயோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும் அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றூம் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்"

சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை.இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான்.

பண்ணை
இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தீல் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள் பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது லேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.

இலாமுரி தேசம்
இலாமுரி தேசம் என்பது சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும்.இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.

இராஜகேசரி இராஜராஜ சோழன்

இராஜகேசரி இராஜராஜ சோழன்

இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

ஆதித்தன்- திருவேலங்காட்டுச் செப்பேடு
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

பேரரசன் அருண்மொழி
இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று.
"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்"

1) காந்தளூர்ச் சாலை:
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும் பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

2)மலைநாடு
கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.




3)ஈழப் போர்
இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.

ஈழத்தில் சோழக் கோயில்கள்
இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.


மேலைச் சாளுக்கியர்-சத்யாசிரயனுடன் போர்

இரண்டாம் தைலப்பன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய கி.பி 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன.

ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராஜராஜனது கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது

இராஜேந்திரன் தலைமை
தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளை சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் இது கட்டி முடிக்கப்பட்டது.

பட்டங்கள்
இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.