Saturday, August 15, 2009

முதலாம் ராஜேந்திரன் சோழன் மெய்கீர்த்தி

முதலாம் ராஜேந்திரன் சோழன் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுரை நாடும்
துடர்வன வெளிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சுழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரன் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
சிந்தற முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத்
தோல் பெருங்காவல் பல்பழ தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திபத் தீவரன் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும்
பயன்கோடு பழிமிக முயன்கியில் முதுகிட்து
ஒலித்தசைய சிங்கன் அளபரும் புகழோடும்
பீடில் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பேறு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
முதிற்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடி வளைய நாமனைக் கோணமும்
வெந்சிலொஐ வீரர் பஞ்சப் பழியும்
பாசுடை பழன மாசுனித் தேசமும்
அயர்வில்வன் கீர்த்தி யாதினாக ரவையில்
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர் காலத்துக் கிளையோடும் பிடித்துப்
பலதனத் டுநிரை குலத் குவியும்
கிட்டருன் செரிமிலை யோட்ட விஷயமும்
பூசுரர் சேர்ந கோசல நாடும்
தன்மை பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சுரணை முரனுரத் தாக்கித்
திக்கனைக் கீர்த்தி தக்கன லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழின் தொடத்
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர்பன் தாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும்
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவ்யுள் பலகாலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியோடும் அகப்படுத்து
யுரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகனகர்ப் போர்த் தொழில் வாசலில்
விசா தறதோ ரணமும் முதொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யுறேயில் தொன்மலை யுறும்
ஆழ்கடல் அகழ்சுழ் மாயிரு டிங்கமும்
கலங்க வல்வஇணை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாலமும்
காவல் புரிசை மேல்விளிம் பங்கமும்
விளைப்பான் தூருடை வாலிபன் தூறும்
கலமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கொர்புகழ்த் தலைத் தக்கொலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தெனக் கலர்போழில் மாணக்க வாரமும்
தோடுகடற் காவல் கடுமுரன் கடாரமும்
மாபொரு தந்தார் கொண்ட
கோப பரகேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு...

No comments: