Thursday, April 16, 2009

பாரதி

மஹாசக்திக்கு விண்ணப்பம்

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்

மூச்சை நிறுத்திவிடு,

தேகத்தைச் சாய்த்துவிடு அல்லாலதில்

சிந்தனை மாய்த்துவிடு,

யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்

ஊனைச் சிதைத்துவிடு,

ஏகத் திருந்துலகம் - இங்குள்ளயாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு,

சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்செத்த உடலாக்கு,

இந்தப் பதர்களையே - நெல்லா மெனஎண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே!

உள்ளம் குளிராதோ?

பொய்யாணவஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ? - அம்மா!

பக்திக்கண்ணீர் பெருகாதோ?

வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே - அனைத்திலும்மேவி யிருப்பவளே!

No comments: