மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு,
தேகத்தைச் சாய்த்துவிடு அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு,
யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு,
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளயாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு,
சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச்செத்த உடலாக்கு,
இந்தப் பதர்களையே - நெல்லா மெனஎண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே!
உள்ளம் குளிராதோ?
பொய்யாணவஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ? - அம்மா!
பக்திக்கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே - அனைத்திலும்மேவி யிருப்பவளே!
No comments:
Post a Comment