Wednesday, December 10, 2008

மூன்றாம் ராஜ ராஜ சோழன்

சுந்தர பாண்டியனின் படை எழுச்சி

மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப் பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுக் கொடுக்கு முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராஜ ராஜன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதியா அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமையம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர் களம் புகுந்தான் பாண்டியன்.

மூன்றாம் ராஜ ராஜ சோழன் சோழர்கள் வம்சா வழியில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலில் நிழலில் இருந்த ராஜ ராஜ சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காக காத்திருந்த பாண்டியன், தக்க சமயத்தில் படை எடுத்து வந்து சோழ சாம்ராஜ்யத்தை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரை படை எடுத்து வந்து சோழனை பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராஜ ராஜ சோழன் தோற்று திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராஜ ராஜ சோழன்.

கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை

சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராஜ ராஜ சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்கு கட்ட வேண்டிய கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரினால் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது.

போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்கு பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராஜ ராஜ சோழனுக்கு அடி பணியாமல் ராஜ ராஜனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரை சென்று கொப்பெருஞ்சின்கனின் செல்வங்களை கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராஜ ராஜ சோழனை சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான்.

ராஜ ராஜ சோழனை மீட்ட பின்பு காவேரி கரை வரை சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரி கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகையைக்கு உட்பட்டு, அவர்களது ஆட்சியை சார்ந்தே இருந்தனர்.

வீர நரசிம்மன்

பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறைக் காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன். சோழர்களை பழையாறை நகரசும் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள போர் புரிந்த போது சேர்ந்துக் கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் மீது திரும்பக் கூடும் என்று சந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான் போசளன்.

மூன்றாம் ராஜேந்திர சோழன்

தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராஜ ராஜ சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது ஆட்சியின் நாற்பதாம் ஆண்டு தனது மகன் மூன்றாம் ராஜேந்திர சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சி ஆண்டிலேயே அவனை மன்னனாக அறிவித்தான்.

No comments: