Thursday, October 2, 2008

சதுர்வேத மங்கலம், மணிமங்கலம்

"தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி"

கலையும் தமிழும் புத்துயிர் பெற்றது பல்லவர்கள் காலத்தில். களபிறர்கள் காலத்தே சமஸ்கிருதமும் சாகிருதி என்ற மொழியும் தமிழகத்தில் தடம் பதித்து இருந்த காலத்தில் தமிழுக்கு தொண்டாற்ற பிறந்தவர்கள் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும். தமிழுக்கு தொண்டாற்ற அவர்கள் இருந்த போது அவர்களுக்கு சேவை செய்யவும் கலைதனை வளர்க்கவும் உறுதுணையாய் இருந்தவர்கள் பல்லவர்கள். அந்த பல்லவர்கள் தங்கள் ஆட்சிதனை புத்துயிர் பெற்ற இடம் இந்த மணிமங்கலம்.

சாளுகியர்களிடம் மகேந்திர வர்மர் தோற்ற இடம் இந்த மணிமங்கலம். தங்கள் தோல்வி தனை களைந்து வெற்றிக் கொடிதனை ஏற்ற மாமல்லன் புறப்பட்ட இடமும் இந்த இடம் தான். ஆதலால் தமிழுக்கு புத்துயிர் ஊட்டிய பல்லவர்களின் முக்கிய இடமாக திகழ்ந்த இந்த மணிமங்கலத்தில் சிறப்புற விளங்கிய சிவாலயம் இன்று கலை இழந்து சிதைந்த நிலையில் கவனிப்பாரற்று இருக்கின்றது.

தங்களின் புத்துயிர் பெற்ற மண்ணை நினைவிடம் ஆக்க கலைதனை கை கொண்டான் மாமல்லன் . சிறிய கோவிலாக இருந்திருக்க கூடிய இந்த கைலாசநாதர் கோவில் சோழர்கள் காலத்தில் பெரிதும் மாற்றப் படிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

இந்த கைலாசநாதர் கோவிலின் அருகே உள்ள தர்மேஸ்வரநாதர் கோவிலும் சிறிது சிறிதாக பழுது அடைந்து வருகின்றது. இந்த கோவிலும் பல்லவ காலத்தில் கட்டப் பட்ட கோவிலாகும்.

சதுர்வேத மங்கலம்

சதுர்வேத மங்கலம் என்று சாசனங்களில் குறிக்க பட்டிருக்கும் இந்த ஸ்தலம் தமிழர்களின் மிகப் புகழ் வாய்ந்த ஸ்தலம் ஆகும். நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் நாயன்மார் அவர்களால் பாடப் பட்ட ஸ்தலம். நரசிம்ம பல்லவனின் படை மாதண்ட நாயகனாகிய (சேனாதிபதி) இந்த பரஞ்சோதியே பின்னாளில் சிறுத்தொண்ட நாயன்மார் ஆனவர். தானங்களில் சிறந்த தானம் அன்னதானம், அந்த அன்னதானத் தொண்டினை இந்த கோவிலில் தொடங்கி வைத்தவர் சிறுத்தொண்ட நாயன்மாரே.

சதுர்வேத மங்கலம் என்று பேர் பெற்ற இந்த ஸ்தலமே இன்றைய மணிமங்கலம் என்னும் கிராமம் ஆகும். வரலாற்று சிறப்பு பெற்ற இந்த ஸ்தலத்தில் புனரமைப்பு பனி நடைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.


பாலாபிஷேகம்

இந்தக் கோவில் புனரமைப்பு பணியினை ARULMIGU THIRUKAILAYANATHAR GNANAMBIGAI EDUCATIONAL & CHARITABLE டிரஸ்ட்ஏற்றுக் கொண்டுள்ளது. இவர்களது மேற்பார்வையில் 2008 ஜனவரி மாதம் 20 ம நாள் பாலபிஷேகம் சிறப்புற நடைப் பெற்றது. மேலும் இந்த கோவிலில் இறைவனுக்கு தனி தனியாக சந்நிதிகள் கட்டப்படவுள்ளன.

இறைவன் மேல் பாரத்தினை ஏற்றி வேலைதனை தொடங்கி விட்டார்கள் இதோ இன்னொரு விண்ணகரம் கட்டப் படுகின்றது. உலக ரட்சகன் ஆபத்பாண்டவன் அருளோடு ஆரம்பித்திருக்கும் இந்த புனரமைப்பு வேளையில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

No comments: